இலங்கைக்கு புலம்பெயர் தொழிலாளர்கள் அனுப்பிய பணம் 964 மில்லியன் டொலர்

Date:

இவ்வருடத்தின் முதல் இரு மாதங்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் இலங்கைக்கு கிடைத்துள்ள வௌிநாட்டுச் செலாவணி 964 மில்லியன் டொலர்கள் என, இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்களின் பண அனுப்பல்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகை மூலம் கடந்த இரு மாதங்களில் 1651 மில்லியன் டொலர் அந்நியச் செலாவணி ஈட்டப்பட்டுள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

இன்று (26) இடம்பெற்ற மத்திய வங்கியின் நாணயக் கொள்கை மீளாய்வு தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மத்திய வங்கி இதனைத் தெரிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மூலம் 687 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஈட்டப்பட்டுள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.

இக்காலப் பகுதியில் சுமார் 2 இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...