ஈஸ்டர் தாக்குதலுக்கு 5 வருடங்கள்: ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் நீதி கோரிய பேராயர்

Date:

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு 5 வருடங்கள் ஆகின்ற நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் தற்போது நடைபெற்று வரும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வில் காணொளி ஊடாக கர்தினால் கருத்துக்களை பகிர்ந்துகொண்ட போதே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் உட்பட அனைவருக்குமான வெளிப்படையான மற்றும் சுயாதீனமான பொறுப்புக்கூறல் செயன்முறையின் தோல்வி குறித்தும் அவர் இதன்போது கவலை தெரிவித்துள்ளார்.

தாக்குதல் நடத்தப்பட்டு ஐந்து வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில், இன்று வரை பல்வேறும் மட்டத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள போதிலும் அவை கிடப்பில் போடப்பட்டுள்ளதாக கர்தினால் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், வெளிப்படையான, சுதந்திரமான மற்றும் நியாயமான விசாரணைக்காக தம்மால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் மற்றும் வேண்டுகோள்கள் இலங்கை அரசாங்கத்தால் தொடர்ந்தும் நிராகரிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கடந்த காலத்தில் நடந்த அனைத்து விதமான கொலைகள், காணாமல் போதல்கள் மற்றும் அத்துமீறல்கள் பற்றிய வெளிப்படையான விசாரணைகள் அவசியம் என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு தேசத்தையும் அனைத்து விடயங்களிலும் வெளிப்படையான விசாரணைக்கு வலியுறுத்துமாறும் கர்தினால் கோரிக்கை விடுத்துள்ளார்.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...