சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இயற்கையை கண்டுகளிக்க புதிய திட்டம் !

Date:

பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்ட சில பழைய ரோமானிய ரயில் பெட்டிகள் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சுற்றுலா ரயில் பெட்டிகளாக புனரமைக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய, குறித்த ரயில் பெட்டிகள் பார்வையாளர் கூடங்களாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

இதனூடாக, ரயில் பயணத்தின்போது, இயற்கையை கண்டுகளிக்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புனரமைப்புப் பணிகளுக்காக ரயில்வே திணைக்களம் 55 இலட்சம் ரூபாவை செலவிட்டுள்ளது.

இரத்மலானையிலுள்ள பிரதான ரயில் இயந்திர தொழிற்சாலையின் ஊடாக, பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்ட இந்த ரோமானிய ரயில் பெட்டிகள் நவீனமயப்படுத்தப்பட்டுள்ளன.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி, பதுளைக்கான ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டு 100 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு இந்த ரயில் பெட்டிகளை சேவையில் இணைக்க போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது.

Popular

More like this
Related

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக முதல் முஸ்லிம் ஸோரான் மம்தானி தேர்வு.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்...

வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குள்ளான தேவாலயங்களுக்கு விஜயம்

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் பேராயர்...

ஐக்கிய அரபு இராச்சியத்தின் இராஜாங்க அமைச்சர்- விஜித ஹேரத் சந்திப்பு: பொருளாதார வாய்ப்புகள் குறித்து கவனம்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் சயீத் பின் முபாரக் அல்...

நாட்டின் சில பகுதிகளில் மட்டும் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடும்.

வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்தின்...