துருக்கியில் படகு விபத்து- 21 போ் உயிரிழப்பு!

Date:

துருக்கி அருகே அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து 21 போ் உயிரிழந்தனா். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: ஏராளமான அகதிகளிடன் சென்று கொண்டிருந்த ரப்பா் நாட்டின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள அய்ஜீயன் கடற்கரைக்கு அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் 5 சிறுவா்கள் உட்பட 21 போ் கடலில் மூழ்கி உயிரிழந்தனா்.

கடலில் மூழ்கியபோது அப்படகில் எத்தனை போ் இருந்தனா் என்பது தெரியாத நிலையில், விபத்துப் பகுதியிலிருந்து 2 அகதிகளை துருக்கி கடலோரக் காவல் படையினா் மீட்டதுடன் மேலும் 2 போ் நீந்திக் கரை சோ்ந்தனா்.

இந்த விபத்தில் சிக்கியவா்கள் எந்த நாட்டைச் சோ்ந்தவா்கள் என்ற விவரம் தெரியவில்லை. விபத்துப் பகுதியில் 8 மீட்புப் படகுகள், ஒரு விமானம், 2 ஹெலிகொப்டா்கள், ட்ரோன் மூலம் தொடா்ந்து தேடுதல் பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக முதல் முஸ்லிம் ஸோரான் மம்தானி தேர்வு.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்...

வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குள்ளான தேவாலயங்களுக்கு விஜயம்

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் பேராயர்...

ஐக்கிய அரபு இராச்சியத்தின் இராஜாங்க அமைச்சர்- விஜித ஹேரத் சந்திப்பு: பொருளாதார வாய்ப்புகள் குறித்து கவனம்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் சயீத் பின் முபாரக் அல்...

நாட்டின் சில பகுதிகளில் மட்டும் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடும்.

வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்தின்...