‘மொட்டு ஆதரவின்றி ஜனாதிபதித் தேர்தலில் யாரும் வெல்ல முடியாது’

Date:

பொதுஜன பெரமுனவின் ஆதரவின்றி ஜனாதிபதித் தேர்தலில் யாரும் வெல்ல முடியாது என்று முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ அமெரிக்காவிலிருந்து  இன்று இலங்கைக்கு வந்தடைந்தார்.

இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

“எதிர்வரும் தேர்தல்களில் எமது கட்சியை வெற்றிகரமாக வழிநடத்தவே இலங்கை வந்துள்ளேன். எமது பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவின்றி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாரும் வெற்றி பெற முடியாது. கடந்த காலத் தேர்தல்களை போன்றே எதிர்வரும் தேர்தல்களிலும் எமது கட்சி பாரிய மக்கள் ஆதரவைப் பெறும்” என்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கும் பசில் ராஜபக்‌ஷவுக்கும் இடையில் தனிப்பட்ட ரீதியிலான கலந்துரையாடல் ஒன்றும் நடைபெற்றுள்ளது.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...