இன்று முதல் விசேட ரயில் சேவைகள்

Date:

இன்று முதல் ஆரம்பமாகவுள்ள நீண்ட வார விடுமுறையை முன்னிட்டு வடக்கு மற்றும் பிரதான ரயில் மார்க்கங்களில் விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, இன்று காலை 7.30க்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து பதுளைக்கான விசேட ரயில் ஒன்று சேவையில் ஈடுபடவுள்ளது.

அதேநேரம், இன்றைய தினமும், நாளைமறுதினமும், இரவு 7.30க்கு மற்றுமொரு விசேட ரயில் கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.

அத்துடன், நாளை மறுதினம் பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை நோக்கி காலை 7.45க்கு விசேட ரயில் ஒன்று புறப்படவுள்ளது.

இன்றும் நாளை மறுதினமும் பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை நோக்கி மாலை 5.20க்கு புறப்படவுள்ளது.

இதேவேளை, நீண்ட வார இறுதியில் அனுராதபுரம் மற்றும் காங்கேசன்துறை ரயில் நிலையங்களுக்கு இடையே வடக்கு மார்க்கத்தில் பல ரயில் சேவைகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று, நாளை மற்றும் நாளைமறுதினம் அனுராதபுரத்தில் இருந்து காங்கேசன்துறைக்கு விசேட ரயில் சேவை காலை 6 மணிக்கு முன்னெடுக்கப்படவுள்ளது.

அத்துடன், காங்கேசன்துறையிலிருந்து அனுராதபுரம் வரையில் மாலை 4.30க்கு ரயில் சேவை ஒன்று இயக்கப்பட உள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட வழிபாட்டுத் தலங்களுக்கு தலா ரூ. 25000!

மோசமான காலநிலை காரணமாக பேரிடருக்கு உள்ளான அனைத்து வழிபாட்டு தலங்களையும் துப்பரவு...

இலங்கையின் மீட்பு முயற்சிகளுக்காக 35 மில்லியன் டொலர்களை திரட்டும் ஐ.நா!

இலங்கையின் மீட்பு முயற்சிகளை ஆதரிப்பதற்காக, அடுத்த நான்கு மாதங்களில் 35 மில்லியன்...

கொழும்பு ரிட்ஜ்வே வைத்தியசாலையில் ‘ஓட்டிசம்’ அலகை மேம்படுத்த ரூ. 398.09 மில்லியன் ஒதுக்கீடு!

கொழும்பு சீமாட்டி றிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில் முழுமையான வசதிகளுடனான மனவளர்ச்சி குன்றிய...

அமெரிக்க உயர்மட்ட இராஜதந்திரி அலிஸன் ஹூக்கர் இலங்கை வருகை!

அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்காவின் துணை வெளிவிவகாரச் செயலாளர் அலிசன் ஹூக்கர், உத்தியோகபூர்வ...