இன்று முதல் விசேட ரயில் சேவைகள்

Date:

இன்று முதல் ஆரம்பமாகவுள்ள நீண்ட வார விடுமுறையை முன்னிட்டு வடக்கு மற்றும் பிரதான ரயில் மார்க்கங்களில் விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, இன்று காலை 7.30க்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து பதுளைக்கான விசேட ரயில் ஒன்று சேவையில் ஈடுபடவுள்ளது.

அதேநேரம், இன்றைய தினமும், நாளைமறுதினமும், இரவு 7.30க்கு மற்றுமொரு விசேட ரயில் கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.

அத்துடன், நாளை மறுதினம் பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை நோக்கி காலை 7.45க்கு விசேட ரயில் ஒன்று புறப்படவுள்ளது.

இன்றும் நாளை மறுதினமும் பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை நோக்கி மாலை 5.20க்கு புறப்படவுள்ளது.

இதேவேளை, நீண்ட வார இறுதியில் அனுராதபுரம் மற்றும் காங்கேசன்துறை ரயில் நிலையங்களுக்கு இடையே வடக்கு மார்க்கத்தில் பல ரயில் சேவைகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று, நாளை மற்றும் நாளைமறுதினம் அனுராதபுரத்தில் இருந்து காங்கேசன்துறைக்கு விசேட ரயில் சேவை காலை 6 மணிக்கு முன்னெடுக்கப்படவுள்ளது.

அத்துடன், காங்கேசன்துறையிலிருந்து அனுராதபுரம் வரையில் மாலை 4.30க்கு ரயில் சேவை ஒன்று இயக்கப்பட உள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...