இலங்கைக்கு புலம்பெயர் தொழிலாளர்கள் அனுப்பிய பணம் 964 மில்லியன் டொலர்

Date:

இவ்வருடத்தின் முதல் இரு மாதங்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் இலங்கைக்கு கிடைத்துள்ள வௌிநாட்டுச் செலாவணி 964 மில்லியன் டொலர்கள் என, இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்களின் பண அனுப்பல்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகை மூலம் கடந்த இரு மாதங்களில் 1651 மில்லியன் டொலர் அந்நியச் செலாவணி ஈட்டப்பட்டுள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

இன்று (26) இடம்பெற்ற மத்திய வங்கியின் நாணயக் கொள்கை மீளாய்வு தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மத்திய வங்கி இதனைத் தெரிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மூலம் 687 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஈட்டப்பட்டுள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.

இக்காலப் பகுதியில் சுமார் 2 இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

Popular

More like this
Related

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘தெமட்டகொட சமிந்த’விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி!

பாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம்...

கொவிட் காலத்தில் தன்னார்வத் தொண்டு செய்த இளைஞருக்கு இலவச ஹஜ் வாய்ப்பு.

கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் பணிகளில் தன்னார்வமாக...

சவூதி அரேபியா சென்றடைந்த இலங்கையின் முதல் ஹஜ் யாத்ரீகர்கள் குழு: தூதுவர் அமீர் அஜ்வத் வரவேற்பு.

2026-ஆம் ஆண்டுக்கான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இலங்கையிலிருந்து புறப்பட்ட 325...

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற விஜய்க்கு நமல் ராஜபக்ஷ வாழ்த்து!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றியை பதிவு செய்தமைக்காக நடிகரும்,...