இலங்கையில் ஏற்பட்ட மாற்றம் தொடர்பில் ஜனாதிபதி பாராளுமன்றில் உரை

Date:

1977ஆம் ஆண்டுக்கு பின்னர் முதன்முறையாக 2023ஆம் ஆண்டில் கொடுப்பனவு இருப்பு மற்றும் நடப்புக் கணக்கு உபரியை அடைய முடிந்ததாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று விசேட உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக கடந்த வருடம் இதே காலப்பகுதியில் 363 ரூபாயாக இருந்த அமெரிக்க டொலரின் பெறுமதி நேற்று 308 ரூபாயாக வீழ்ச்சியடைந்து ரூபாயின் பெறுமதி வலுப்பெற்றுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இலங்கை  பொருளாதாரத்தை முன்னேற்றுவது மற்றும் சர்வதேச கடன் திட்டங்கள் தொடர்பாக ஜனாதிபதி உரையாற்றினார்.

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் மாணவர்களின் கல்வித் திட்டத்தை உயர்த்துவது போன்ற விடயங்கள் பற்றி விபரிக்கிறார்.

விவசாயத்துறை முன்னேற்றம் அதற்கான உதவித் திட்டங்கள் மற்றும் முதலீட்டுத் திட்டங்கள் தொடர்பாகவும் மின்சார கட்டணங்கள் குறைக்கப்பட்டமை மற்றும் மாணவர்களுக்கான கல்வி உபகரணங்களுக்குரிய வற் வரிகள் போன்றவற்றை குறைப்பது பற்றியும் ரணில் விக்கிரமசிங்க தனது உரையில்  குறிப்பிட்டார். .

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...