இலங்கையில் ரமழான் தலைப்பிறை தென்பட்டது: கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவிப்பு

Date:

புனித ரமழான் மாதத்திற்கான தலைப் பிறை இலங்கையில் இன்று மாலை தென்பட்டுள்ளதாகவும் இதற்கமைய நாளை (12) நோன்பு பிடிக்குமாறும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு அறிவித்துள்ளது.

கொழும்பு பெரிய பள்ளிவாசலில் பிறைக்குழு இன்று மாலை கூடியது. இதன்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தலை பிறை தென்பட்டமைக்கான தகவல்கள் கிடைக்கப்பெற்றதை அடுத்து நோன்பு நாளை முதல் ஆரம்பமாகும் என பிறைக்குழு அறிவித்துள்ளது.

தலைப்பிறை தீர்மானிக்கும் மாநாட்டில்  அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பிறைக்குழு, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர், கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

செப்டம்பர் 17-19 திகதிகளில் இந்தோனேசியாவில் நடைபெறும் மதங்களுக்கிடையிலான கருத்தரங்கு!

அஷ்ஷைக்.எஸ்.எச்.எம். பளீல் இந்தோனேசியாவில் இருந்து... "மத சுதந்திரமும் ஆசியாவில் மத சிறுபான்மையினது உரிமைகளும்"...

2025 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 300 கொலைச் சம்பவங்கள் பதிவு.

2025 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 300 கொலைச் சம்பவங்கள்...

காஸா மீதான போரை நிறுத்தக்கோரி நாளை சென்னையில் மாபெரும் பேரணி

கடந்த இரண்டு ஆண்டுகளாக காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் காட்டுமிராண்டித்தனமான இனச்...

மின்சார சபை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பால் கடும் போக்குவரத்து நெரிசல்

சுகவீன விடுமுறையை அறிவித்து முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பை தொடர்ந்து மின்சார சபை தொழிற்சங்கங்கள்...