இலங்கையில் ரமழான் தலைப்பிறை தென்பட்டது: கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவிப்பு

Date:

புனித ரமழான் மாதத்திற்கான தலைப் பிறை இலங்கையில் இன்று மாலை தென்பட்டுள்ளதாகவும் இதற்கமைய நாளை (12) நோன்பு பிடிக்குமாறும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு அறிவித்துள்ளது.

கொழும்பு பெரிய பள்ளிவாசலில் பிறைக்குழு இன்று மாலை கூடியது. இதன்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தலை பிறை தென்பட்டமைக்கான தகவல்கள் கிடைக்கப்பெற்றதை அடுத்து நோன்பு நாளை முதல் ஆரம்பமாகும் என பிறைக்குழு அறிவித்துள்ளது.

தலைப்பிறை தீர்மானிக்கும் மாநாட்டில்  அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பிறைக்குழு, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர், கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

டெங்கு அபாயம் அதிகமுள்ள வலயங்களை இலக்காகக் கொண்டு இன்று (06) விசேட...

பல்கலைக்கழக பிரவேசத்திற்கான விண்ணப்பங்கள் மே 19 வரை நீடிப்பு

2025/2026 ஆம் கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக பிரவேசத்திற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு மே மாதம்...

மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த பொதுமக்களின் கருத்துக்கேட்பு இன்று

2026 ஆம் ஆண்டுக்கான முன்மொழியப்பட்ட விசேட மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த...

சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்

அயன மண்டலங்களுக்கு இடையிலான ஒடுங்கும் வலயத்தின் (ITCZ) தாக்கமும்  மற்றும் இலங்கைக்கு...