ஒரு குழந்தை உட்பட 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

Date:

இரண்டு பிரதேசங்களில் நீரில் மூழ்கி ஒரு குழந்தை உட்பட மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.

சந்திவேல் சித்தாண்டி பகுதியில் சந்தனமடு ஆற்றில் மூழ்கி இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சித்தாண்டி 2 பகுதியைச் சேர்ந்த 25 மற்றும் 33 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் நேற்று (08) சில நண்பர்களுடன் குளிக்கச் சென்ற நிலையிலேயே, நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீரில் மூழ்கியவர்கள் பிரதேசவாசிகளால் மாவடிவேம்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, நேற்று இரவு உயிலங்குளம் திருக்கதீஸ்வரம் பாலாவி ஏரியில் மூழ்கி குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

வவுனியா பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 9 வயது குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

உயிலங்குளம் திருக்கேஸ்வரம் கோவிலில் இடம்பெற்ற திருவிழாவைக் காண மக்கள் குழுவுடன் நீராடச் சென்ற குழந்தை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை உயிலங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...