சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இலங்கை மனித உரிமை மன்றத்தினால் அண்மையில் புத்தளம் நகர மண்டபத்தில் சுமார் 200 வறிய மக்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வுக்கு கொழும்பு தலைமை காரியாலயத்தின் தலைவர் உட்பட சுமார் 18 உறுப்பினர்கள் வருகை தந்து இந்த நிகழ்வை சிறப்பித்தனர்.
மனித உரிமை மன்றத்தின் தலைவர் B.M முர்ஷிதீன் அவர்களும், பிரதி தலைவர் திரு இல்ஹாம் மரிக்கார் அவர்களும் விசேட உரையாற்றினர்.

இந்த திட்டம் வெற்றி பெறுவதற்கு மிக முக்கியமானவர் இல்ஹாம் மரிக்கார் என தெரிவிக்கப்பட்டது.
மற்றும் அவருக்கு பொன்னாடையும் போற்றி கௌரவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து இந்த அமைப்பின் புத்தளம் கிளை ஒன்று ஸ்தாபிக்கப்பட்டது.







