ஞானசார தேரருக்கு 4 வருட கடூழியச் சிறை தண்டனை:கொழும்பு மேல் நீதிமன்றம்

Date:

பொது பலசேனவின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் நான்கு வருட கடூழியச் சிறைத்தண்டனையை விதித்துள்ளது.

இஸ்லாத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட ஞானசார தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இந்த கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபாண்டிகே, 100,000 ரூபாய் அபராதமும் விதித்தார்.

அல்லாஹ்வை தூற்றும் விதமாக கருத்து வெளியிட்டு மத உணர்வுகளை தூண்டியதாக கொழும்பு மேல் நீதிமன்றில் சட்டமா அதிபர் தொடர்ந்துள்ள எச்.சி 1948/20 எனும் வழக்கின் விசாரணைகள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.
இனங்களுக்குடையில் நல்லிணக்கத்தை பாதிக்கும் விதமாக கருத்து வெளியிட்டமை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட ஞானசார தேரருக்கு எதிராக இந்த வழக்கில் சாட்சி விசாரணைகளை 2022 செப்டெம்பர் 20 திகதி ஆரம்பிக்கப்பட்டது.

கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபாண்டிகே முன்னிலையில் இவ்வழக்கு விசாரணை செய்யப்பட்டது.

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...