ஞானசார தேரருக்கு 4 வருட கடூழியச் சிறை தண்டனை:கொழும்பு மேல் நீதிமன்றம்

Date:

பொது பலசேனவின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் நான்கு வருட கடூழியச் சிறைத்தண்டனையை விதித்துள்ளது.

இஸ்லாத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட ஞானசார தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இந்த கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபாண்டிகே, 100,000 ரூபாய் அபராதமும் விதித்தார்.

அல்லாஹ்வை தூற்றும் விதமாக கருத்து வெளியிட்டு மத உணர்வுகளை தூண்டியதாக கொழும்பு மேல் நீதிமன்றில் சட்டமா அதிபர் தொடர்ந்துள்ள எச்.சி 1948/20 எனும் வழக்கின் விசாரணைகள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.
இனங்களுக்குடையில் நல்லிணக்கத்தை பாதிக்கும் விதமாக கருத்து வெளியிட்டமை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட ஞானசார தேரருக்கு எதிராக இந்த வழக்கில் சாட்சி விசாரணைகளை 2022 செப்டெம்பர் 20 திகதி ஆரம்பிக்கப்பட்டது.

கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபாண்டிகே முன்னிலையில் இவ்வழக்கு விசாரணை செய்யப்பட்டது.

Popular

More like this
Related

வித்யா கொலை வழக்கு; குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு

2015-ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாடசாலை மாணவி சிவலோகநாதன்...

சிறுவர்களின் டிஜிட்டல் பாதுகாப்பை உறுதி செய்யப் புதிய கொள்கை!

சிறுவர்கள் டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் சமூக ஊடகங்களை மேற்பார்வையின்றிப் பயன்படுத்துவதால் ஏற்படும்...

தவெகவுக்கு ஆதரவு அளிக்க முடிவு: காங்கிரஸ் விதித்த நிபந்தனை!

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க ஆதரவளித்துள்ள காங்கிரஸ், அக்கட்சிக்கு ஒரேவொரு...

விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

டெங்கு அபாயம் அதிகமுள்ள வலயங்களை இலக்காகக் கொண்டு இன்று (06) விசேட...