தேசிய ரீதியாக நடத்தப்பட்ட கைத்தொழில், விவசாயம் தொடர்பான ஆக்கம் போட்டியில் கல்பிட்டி அல் அக்ஸாவுக்கு பதக்கங்கள்!

Date:

கைத்தொழில் அமைச்சினால் தேசிய ரீதியாக நடத்தப்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான சிறந்த முயற்சியாளர் கழகங்களுக்கிடையிலான கைத்தொழில்,விவசாயம் தொடர்பான ஆக்கம் போட்டியில் கல்பிட்டி அல் அக்ஸா தேசியப் பாடசாலையின் மாணவிகள் பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வெற்றி கொண்டனர்.

அத்துடன் இந்நிகழ்வின் சித்திர போட்டிகளில் கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் 4 மாணவிகள் பங்கேற்றதுடன் அந்த 4 சித்திரங்களும் இன்றைய நிகழ்வில் கண்காட்சிக்காக காட்சிப்படுத்தப்பட்டன.

பல பாடசாலைகளுக்கு மத்தியில் வட மேல் மாகாணத்தில் இருந்து தெரிவாகிய ஒரே ஒரு தமிழ் மொழி மூலமான பாடசாலை என்ற பெருமையையும் கல்பிட்டி அல் அக்ஸா தேசியப் பாடசாலை பெற்றுக் கொண்டமை சிறப்பம்சமாகும்.

இந்நிகழ்விற்கு கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் பிரதி அதிபரான எஸ். எப். சாஜினாஸ் மற்றும் நஸ்ரின் ஆசிரியை சகிதம் இப் போட்டியில் பங்கேற்ற மாணவிகள் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...