நிந்தவூர் ” SHOTOKAN KARATE & MARTIAL ARTS SHOOL ” கராத்தே பாடசாலையின் கராத்தே தரப்படுத்தல் மற்றும் விருது வழங்கும் நிகழ்வு!

Date:

நிந்தவூர் பிரதேச சபை மண்டபத்தில் கராத்தே தரப்படுத்தல் மற்றும் கௌரவிப்பு நிகழ்வு திங்களன்று (18) அம்பாறை மாவட்ட SKMAS கராத்தே பாடசாலையின் கராத்தே பயிற்றுவிப்பாளர் MT. அஹமட் நிம்ஷி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினர்களாக கல்முனை இராணுவ படைப்பிரிவு தலைமையகத்தின் அதிகாரி மேஜர் ரூவன் மற்றும் SKMAS பாடசாலையின் தலைவரும் சுஹாரி சோட்டோக்கன் கராத்தே சங்கத்தின் பிரதம போதனாசிரியருமான சிஹான் MS. வஹாப்தீன் மற்றும் கல்முனை பிராந்தியத்தின் விளையாட்டு ஊக்குவிப்பாளரும் சமூக சேவையாளரும் கல்முனை BESTOR நிறுவனத்தின் உரிமையாளருமான AM. றியாஸ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் கௌரவ விருந்தினர்களாக அட்டாளைச்சேனை கல்வியற்கல்லூரி விரிவுரையாளர் MIM. அஹமட் ஹுஸைன் மற்றும் கிழக்கு மாகாணத்தின் USKU பிரதிநிதியும் சுஹாரி சோட்டோக்கன் கராத்தே சங்கத்தின் பொதுச் செயலாருமான N. ஸதாம் மற்றும் சுஹாரி கராத்தே சங்கத்தின் கராத்தே ஒருங்கிணைப்பாளர் ACM. பிர்னாஸ் ஆசிரியர் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர் .

இந்நிகழ்விற்கு SKMS பாடசாலையின் நிந்தவூர் பிராந்தியம் மற்றும் பொத்துவில் பிராந்தியங்களிலிருந்து மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

தரப்படுத்தல் நிகழ்வில் சித்தி அடைந்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் கடந்த காலங்களில் கராத்தே போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்திய வெற்றியாளர்களுக்கு அதிதிகளினால் விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.

மேலும் USKU பணிப்பாளரும் எமது SKMAS பாடசாலையின் தொழில்நுட்ப ஆலோசகருமான சிஹான் ZA. ரவூப் அவர்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

SLM. நுஸ்ரான்

 

Popular

More like this
Related

இதுவரை 103  காட்டு யானைகள் புகையிரதங்களில் மோதி உயிரிழந்துள்ளன

2015 ஆம் ஆண்டு முதல்  இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம்  103  காட்டு...

அமானா வங்கியின் சித்தீக் அக்பர், AAFI இன் தலைவராக நியமனம்

அமானா வங்கியின் நுகர்வோர் வங்கியியல் மற்றும் சந்தைப்படுத்தல் உப தலைவர் சித்தீக்...

ஜனாதிபதித் தேர்தலில் ஒரு கோடியே எழுபது இலட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி!

2024ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதித் தேர்தலில் சுமார் ஒரு கோடியே எழுபது இலட்சம்...

இன்று இரவு கடும் மின்னல் தாக்கம் ஏற்படும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (09) கடும் மின்னல் தாக்கம் ஏற்படும்...