புத்தளத்தில் இன்று நடைபெற்ற மார்ச் 12 இயக்கத்தின் ஊடக சந்திப்பு

Date:

மார்ச் 12 இயக்கம் ஜனநாயகத்திற்காகவும் நீதியான தேர்தலுக்காகவும் செயற்படும் ஒரு அமைப்பாகும்.

அந்தவகையில் இன்று (12ஆம் திகதி) மார்ச் 12 அமைப்பின் பிரதிநிதிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் செய்தியாளர் சந்திப்புகளை ஏற்பாடு செய்திருந்தனர்.

இயக்கத்தின் புத்தளம் மாவட்டக் கிளையின்  செய்தியாளர் சந்திப்பொன்று இன்று புத்தளத்தில் இடம்பெற்றது.

இதில் புத்தளம் பகுதியிலுள்ள தலைவர்கள் கலந்துகொண்டதுடன் நிகழ்ச்சியை அதன் தலைவர்  ருமைஸ் அவர்கள் நடத்தி வைத்தார்.

இதன்போது மார்ச் 12 இயக்கம் எடுத்த 8 நிலையான கொள்கைகள் பற்றி தெரிவிக்கப்பட்டதுடன் இது தொடர்பான கள நிலைமைகள் பற்றியும் பிரஸ்தாபிக்கப்பட்டன.

புத்தியாகம ரத்தின தேரர், அருட்தந்தை யோஹான், சுந்தரராம குருக்கள், அஷ்ஷெய்க் அப்துல் முஜீப் ஆகியோர் இதன்போது கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்துக்களை வழங்கினர்.

மார்ச் 12 இயக்கம் நாட்டில் நியாயமான தேர்தல், தூய்மையான வேட்பாளர்களுக்காக குரல் கொடுத்து வருவது குறிப்பிடத் தக்கது.

Popular

More like this
Related

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம் திறப்பு

நாட்டிற்கு வருகை தருகின்ற வெளிநாட்டவர்களுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம்...

கம்பஹா – கொழும்பு தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தம்

ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன. கம்பஹா –...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (04) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...