பொருளாதார நெருக்கடியால் மன அழுத்தத்தில் பொது மக்கள்: வழிகள் மற்றும் வழிமுறைகளுக்கான நாடாளுமன்றக் குழு அறிக்கை

Date:

நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியினால் மன அழுத்தம் , நோய் நிலைமைகள் அதிகரித்தல் போன்ற காரணங்களால் நாட்டில் 10 பேரில் 6 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக வழிகள் மற்றும் வழிமுறைகளுக்கான நாடாளுமன்றக் குழுவில் அறிக்கையிடப்பட்டுள்ளது.

இன்னும் சில தினங்களில் 10 பேரில் 8 பேர் எனும் விதத்தில் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளதாகவும் குறித்த அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

இதேவேளை , வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, இடைப்பட்டவர்கள் 300 வீதமான இலாபத்தை பெற்றுக்கொள்வதாக அறிக்கை தெரிவித்துள்ளது.

பொருட்களின் விலை அதிகரிப்பே இதற்கான முக்கிய காரணம் எனவும் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள இலங்கை  தீர்க்கப்படாத பல்வேறு பிரச்சினைகளுடன் காணப்படுகிறது.

இதற்கான தீர்வை தேடுவதற்கான பல முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டு வந்தாலும் வாழ்க்கை செலவினத்தை தாங்கிக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவு , வரி சுமை , உர பிரச்சினை , மின் கட்டண அதிகரிப்பு , இளைஞர்களுக்கான வேலையின்மை , மனித உரிமை மீறல்கள் போன்ற பிரச்சினைகளால் பொது மக்கள் பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளனர்.

உணவுத் தேவைகளை நிவர்த்தி செய்தல் , குழந்தைகளை பாடசாலைக்கு அனுப்புதல் , மாதாந்த கட்டணங்களை செலுத்துதல் போன்ற அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதில் சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

 

 

Popular

More like this
Related

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...

2025 இல் இலங்கை இறக்குமதி செய்துள்ள வாகனங்களின் விபரம்!

இந்த ஆண்டு இதுவரை இலங்கை 220,000 க்கும் மேற்பட்ட வாகனங்களை இறக்குமதி...