மாணவர்களின் புத்தகப் பைகளின் எடையைக் குறைக்கும் சுற்றறிக்கை வெளியீடு!

Date:

பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகளின் எடையைக் குறைக்கும் சுற்றறிக்கை இன்று (4) வெளியிடப்படவுள்ளது.

இது தொடர்பான சுற்றறிக்கையை மேல்மாகாண கல்விச் செயலாளர் சிறிசோம லொக்குவிதான வெளியிடவுள்ளதுடன், போட்டிக் கல்விக்கும், உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கும் கனமான புத்தகப் பைகள் தடையாக இருப்பதாக மேல்மாகாண கல்வித் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தற்காலத்தில் குழந்தைகள் சுமந்து செல்லும் புத்தகப் பையின் எடை அதிகமாக இருப்பதால், குழந்தைகள் தொடர்ந்து முதுகுத்தண்டு தொடர்பான கோளாறுகளுக்கு ஆளாகி வருவதாகவும், இதனால் சில குழந்தைகள் நிரந்தர ஊனமுற்றவர்களாகவும் உள்ளதாக மருத்துவ அறிக்கைகள் உறுதி செய்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பெறுபேறுகளுக்குப் பின் உயர் கல்வி கனவா? ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் புதிய மாணவர் அனுமதி!

இலங்கையின் முன்னணி இஸ்லாமிய உயர் கல்வி நிறுவனமான ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில்,...

60 ஆண்டுகளாக நீடித்த கூட்டணி: திமுகவிலிருந்து இருந்து விலகியது ஐயுஎம்எல்!

தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின்...

க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள்; 2.25 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி!

கடந்த 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை...

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...