ரமழான் மாதத்துக்கான தலைப்பிறையை தீர்மானிப்பது தொடர்பில் சவூதி அரேபியாவின் அறிவித்தல்!

Date:

இன்று மார்ச் 10 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு ரமழான் ஹிஜ்ரி 1445ஆவது வருடம் ரமழான் மாதத்துக்கான தலைப் பிறையை தீர்மானிக்கும் முகமாக உள்ளூரில் வாழும் முஸ்லிம்கள் பிறை பார்க்குமாறு சவூதி அரேபியா அரசாங்கம் அந்நாட்டு மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

ரமழான் மாதத்துக்கான பிறை கண்டால் நோன்பு நோற்குமாறும் அவ்வாறு பிறை தென்படவில்லையெனில் ஷஃபான் மாதத்தை முப்பது நாட்களாக கணித்து நிறைவு செய்துகொள்ளுமாறு குறித்த அறிவித்தலில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

வெற்றுக் கண்களாலோ அல்லது தொலைநோக்கியைப் பயன்படுத்தியோ பிறையைக் காணும் பட்சத்தில் அதனை உடனடியாக உள்ளூர் ஷரீயா நீதிமன்றத்திற்குத் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

அதேவேளை  உலகிலுள்ள பல்வேறு முஸ்லிம் நாடுகளில் இன்றைய தினம் பிறை பார்க்கும் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதோடு இன்று உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் ரமழான் நோன்பு இன்று இரவு ஆரம்பிக்கப்படவிருக்கிறது.

இதேவேளையில் இலங்கையில் பிறை பார்க்கும் தினமாக நாளை திங்கட்கிழமை 11ஆம் திகதி என்று கொழும்பு பெரியவாசல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளையதினம் பிறை பார்க்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் வழமைப்போல் இடம்பெறும் என்றும் பிறை சம்பந்தமான தகவல் உறுதிப்படுத்தப்பட்டதன் பின் ரமழான் நோன்பு ஆரம்பிப்பதற்கான அறிவித்தலை அம்மாநாட்டு முடிவின் அறிவிக்கப்படவுள்ளது.

Popular

More like this
Related

60 ஆண்டுகளாக நீடித்த கூட்டணி: திமுகவிலிருந்து இருந்து விலகியது ஐயுஎம்எல்!

தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின்...

க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள்; 2.25 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி!

கடந்த 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை...

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும்...