ரஷ்யாவில் ஐ.எஸ் அதிரடித் தாக்குதல் – 60 பேர் பலி!

Date:

ரஷ்யாவில் தலைநகர் மொஸ்கோவிற்கு அருகில் உள்ள பிரபலமான இசை நிகழ்வில் நடந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்றுள்ளது, இதில் குறைந்தது 60 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ஐ.எஸ்.ஐ.எஸ்-ஐச் சேர்ந்த செய்தி நிறுவனமான அமாக் வெள்ளிக்கிழமை டெலிகிராமில் வெளியிட்ட ஒரு அறிக்கையில் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றது.

மொஸ்கோவில் ‘பிக்னிக்’ என்ற இசைக்குழுவின் கச்சேரியில் கலந்துகொண்ட மக்கள் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இசை அரங்கு ஒன்றில் நுழைந்த 5 மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மேலும் மர்மநபர்கள் இசை நிகழ்ச்சி இடம்பெற்ற இடத்தினை தீயிட்டு கொழுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பின்னர் அவர்கள் “ஒரு வெள்ளை நிற ரெனால்ட் காரில் தப்பிச் சென்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரஷ்ய ஜனாதிபதியாக மீண்டும் புட்டின் தெரிவு செய்யப்பட்ட சில நாட்களில் அதுவும் ரஷ்ய புலனாய்வுப் பிரிவை மீறி இவ்வகையான தாக்குதல் நடந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Popular

More like this
Related

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை வீரர்கள் கைது!

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை உறுப்பினர்கள் கைது...

‘வளர்ந்து வரும் சிறந்த கல்வி நிறுவனம்’ Amazon collegeக்கு மற்றுமொரு விருது.

உயர் கல்வித் துறையில் சுமார் 16 வருடங்களை நிறைவு செய்து வெற்றி...

சவூதியில் 9 நிமிடத்துக்கு ஒரு விவாகரத்து: அதிகமானவை ஒரு வருடத்துக்குள்!

கடந்த ஒரு வருடத்துக்குள் சவூதி அரேபியாவில் 57,595 விவாகரத்துகள் பதிவாகியுள்ளதாக சவூதி...