வடக்கு- கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
ஆளும் தரப்பு பிரதம கொரடா பிரசன்ன ரணதுங்க, வாராந்த மனுக்களை சபையில் சமர்ப்பித்துக் கொண்டிருக்கும் போதே, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ். ஸ்ரீதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், இரா. சாணக்கியன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வவுனியா, வெடுக்குநாறிமலை, ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில், கடந்த மகாசிவராத்திரி தினத்தன்று பொலிஸாரின் அத்துமீறல் மற்றும் ஆலய பூசகர் உள்ளிட்ட எட்டுப்பேர் கைது செய்யப்பட்ட விவகாரம் என்பவற்றுக்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தும் விதமாகவே குறித்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.