250 கோடி செலவில் ராகம வைத்தியசாலையில் நிறுவப்பட்ட எம்.எச் உமர் ஈரல் பராமரிப்பு நிலையம்!

Date:

இலங்கையில் சிறியவர்கள் மற்றும் வளர்ந்தவர்களுக்கிடையில் அதிகரித்து வரும் நாட்பட்ட ஈரல் நோய் காரணமாக ஈரல் மாற்றுச் சிகிச்சைகளை முன்னெடுப்பதற்கென ராகம கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் ஈரல் பராமரிப்பு நிலையமொன்று நேற்று (26) திறந்து வைக்கப்பட்டது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்ட இந்த நிலையத்தினை ப்ரான்டிக்ஸ் நிறுவனத்தின் ஸ்தாபகர் எம் எச் ஒமர் மன்றம் 250 கோடி ரூபா செலவில் நிர்மாணித்திருந்தது.

நிலையத்தைத் திறந்து வைத்த ஜனாதிபதி நாட்டின் பொருளாதாரத்துக்கு ப்ரான்டிக்ஸின் பங்களிப்பைப் பாராட்டியதோடு குறித்த நிலையத்தை நிறுவியமைக்காக தனது நன்றிகளையும் தெரிவித்தார்.

நிகழ்வில் உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன், ப்ரானெ்டிக்ஸின் பணிப்பாளர்களுள் ஒருவரான எம். எச். உமர் அவர்களின் பேரர் ஹஸீப் உமர் உட்பட வைத்தியசாலையினதும் பல்கலைக்கழகத்தினதும் உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

 

Popular

More like this
Related

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...

கோபா குழுவின் தலைவர் பதவி கபீர் ஹாசிமுக்கு..!

பாராளுமன்ற பொதுக் கணக்குகள் குழுவின் (கோபா) (COPA) தலைவர் பதவிக்கு கபீர்...

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாகின்றன!

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாவதாக தேசிய...