250 கோடி செலவில் ராகம வைத்தியசாலையில் நிறுவப்பட்ட எம்.எச் உமர் ஈரல் பராமரிப்பு நிலையம்!

Date:

இலங்கையில் சிறியவர்கள் மற்றும் வளர்ந்தவர்களுக்கிடையில் அதிகரித்து வரும் நாட்பட்ட ஈரல் நோய் காரணமாக ஈரல் மாற்றுச் சிகிச்சைகளை முன்னெடுப்பதற்கென ராகம கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் ஈரல் பராமரிப்பு நிலையமொன்று நேற்று (26) திறந்து வைக்கப்பட்டது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்ட இந்த நிலையத்தினை ப்ரான்டிக்ஸ் நிறுவனத்தின் ஸ்தாபகர் எம் எச் ஒமர் மன்றம் 250 கோடி ரூபா செலவில் நிர்மாணித்திருந்தது.

நிலையத்தைத் திறந்து வைத்த ஜனாதிபதி நாட்டின் பொருளாதாரத்துக்கு ப்ரான்டிக்ஸின் பங்களிப்பைப் பாராட்டியதோடு குறித்த நிலையத்தை நிறுவியமைக்காக தனது நன்றிகளையும் தெரிவித்தார்.

நிகழ்வில் உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன், ப்ரானெ்டிக்ஸின் பணிப்பாளர்களுள் ஒருவரான எம். எச். உமர் அவர்களின் பேரர் ஹஸீப் உமர் உட்பட வைத்தியசாலையினதும் பல்கலைக்கழகத்தினதும் உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

 

Popular

More like this
Related

பெறுபேறுகளுக்குப் பின் உயர் கல்வி கனவா? ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் புதிய மாணவர் அனுமதி!

இலங்கையின் முன்னணி இஸ்லாமிய உயர் கல்வி நிறுவனமான ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில்,...

60 ஆண்டுகளாக நீடித்த கூட்டணி: திமுகவிலிருந்து இருந்து விலகியது ஐயுஎம்எல்!

தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின்...

க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள்; 2.25 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி!

கடந்த 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை...

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...