இடிபாடுகளுக்கு மத்தியில் இப்தார் உணவுகளை பகிர்ந்து கொண்ட காசா மக்கள்!

Date:

புனித ரமழான் மாதம் தொடங்கிவிட்டது. உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் நோன்பு நோற்கிறார்கள், தங்கள் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுகிறார்கள், பிரார்த்தனை மற்றும் வழிபாட்டில் தங்களை அர்ப்பணித்து வருகின்றனர்.

 

ஆனால், காஸா முஸ்லிம்களுக்கு, இந்தப் புனித மாதம் மனவேதனை மற்றும் துக்கம் நிறைந்ததாக காணப்படுகிறது.

இப்போது ஐந்து மாதங்களுக்கும் மேலாக, இஸ்ரேலிய இராணுவத்தின் படுகொலைகள், நோய், பட்டினி மற்றும் தாகத்தை அனுபவிக்கின்றார்கள்.

ரமழான் தொடங்கியும் அதன் வன்முறையும், கொடூரமும் நிற்கவில்லை அல்லது குறையவில்லை.

புனித மாதத்திற்கான ஏற்பாடுகள் எப்போதும் முன்கூட்டியே தொடங்கும். அதற்கு பல வாரங்கள் முன்னதாகவே, மக்கள் நோன்புக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்க வெளியே மக்கள் செல்வார்கள்.

இடிபாடுகளுக்கு மத்தியில் காசா மக்கள் இப்தார் உணவுகளை பகிர்ந்துகொண்டனர்.

இஸ்ரேல் இராணுவத்தின் கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் உணவு விநியோகத்தில் கட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் மக்கள் மக்கள் ரமழான் மாதத்தின் முதல் நாளில் நோன்பு துறக்கும் முன், ஒரு தொண்டு நிறுவனத்தால் உணவை பெற்றுக்கொண்டனர்.

காசாவில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடும் நோய்களும் பல உயிர்களைக் கொன்று வருகின்றன. ஊட்டச்சத்து குறைபாட்டால் குறைந்தது 20 பேர் இறந்ததாகக் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இன்னும் பலர், மருத்துவ வசதிகளை அடைய முடியாமல் ‘அமைதியாக இறந்து கொண்டிருக்கிறார்கள்’ என்றும் சட்டிக்காட்டியுள்ளது.


 

Popular

More like this
Related

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

காசா மக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் சர்வதேச விருது பெற்ற ‘ஹிந்த் ரஜப்’ திரைப்படம் இலங்கையில் திரையிடப்படுகிறது!

சர்வதேச அளவில் மிகப்பிரபலமான விருதைத் தட்டிக்கொண்டதும், காசா மக்களின் துன்பங்களையும் துயரங்களையும்...

17 சுகாதார நிறுவனங்களுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்

சுகாதார சேவையின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்படும் தீர்மானங்கள் எந்தவொரு அரசியல் இலாபத்திற்காகவோ அல்லது...