இலங்கையர்கள் புகைபிடிப்பதற்காக நாளாந்தம் 520 மில்லியன் ரூபாவை செலவிடுகின்றனர்!

Date:

புகையிலை பாவனையால் தினமும் 50 பேர் உயிரிழப்பதாக  மதிப்பிடப்பட்டுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கையை மேற்கோள்காட்டி, மதுபான மற்றும் போதைப்பொருள் தகவல் மையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் சம்பத் டி சேரம் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்நாட்டில் 83 வீதமான மரணங்கள் தொற்றாத நோய்களினால் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தொற்றாத நோய்களை ஏற்படுத்தும் நான்கு முக்கிய காரணிகளில் புகைபிடித்தல் ஒன்று என  அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, இலங்கையர்கள் புகைபிடிப்பதற்காக நாளாந்தம் 520 மில்லியன் ரூபாவை செலவிடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இலங்கையில் மக்களின் சிகரட் பாவனை 9.1 வீதத்தால் குறைந்துள்ள நிலையில் இன்னும் 1.5 மில்லியன் மக்கள் சிகரட்டை பயன்படுத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையை கட்டுப்படுத்துவதற்காக பல மாற்றங்களுக்கான பிரேரணைகள் சமர்ப்பிக்கப்பட்டும் அந்த முன்மொழிவுகள் நடைமுறைப்படுத்தப்படாமை வருத்தமளிப்பதாக சம்பத் டி சேரம் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக முதல் முஸ்லிம் ஸோரான் மம்தானி தேர்வு.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்...

வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குள்ளான தேவாலயங்களுக்கு விஜயம்

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் பேராயர்...

ஐக்கிய அரபு இராச்சியத்தின் இராஜாங்க அமைச்சர்- விஜித ஹேரத் சந்திப்பு: பொருளாதார வாய்ப்புகள் குறித்து கவனம்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் சயீத் பின் முபாரக் அல்...

நாட்டின் சில பகுதிகளில் மட்டும் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடும்.

வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்தின்...