ஒரு குழந்தை உட்பட 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

Date:

இரண்டு பிரதேசங்களில் நீரில் மூழ்கி ஒரு குழந்தை உட்பட மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.

சந்திவேல் சித்தாண்டி பகுதியில் சந்தனமடு ஆற்றில் மூழ்கி இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சித்தாண்டி 2 பகுதியைச் சேர்ந்த 25 மற்றும் 33 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் நேற்று (08) சில நண்பர்களுடன் குளிக்கச் சென்ற நிலையிலேயே, நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீரில் மூழ்கியவர்கள் பிரதேசவாசிகளால் மாவடிவேம்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, நேற்று இரவு உயிலங்குளம் திருக்கதீஸ்வரம் பாலாவி ஏரியில் மூழ்கி குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

வவுனியா பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 9 வயது குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

உயிலங்குளம் திருக்கேஸ்வரம் கோவிலில் இடம்பெற்ற திருவிழாவைக் காண மக்கள் குழுவுடன் நீராடச் சென்ற குழந்தை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை உயிலங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...