கடன் மறுசீரமைப்பு திட்டத்தில் பாரிய முன்னேற்றம்: நிதி இராஜாங்க அமைச்சர்

Date:

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது மீளாய்வு பணிகளை நிறைவு செய்து மூன்றாவது தவணையை பெற்றுக்கொள்வதற்கான பணிகளை ஆரம்பிப்பதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது மீளாய்வு இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில் எக்ஸ் வலைத்தளபதிவில் ராஜாங்க அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்

இதேவேளை நாட்டிற்கு வருகைதந்துள்ள சர்வதெச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இன்று காலை ஜனாதிபதியை சந்தித்ததன் பின்னர் மீளாய்வு பணிகளை ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்

மீளாய்வை வெற்றிகரமாக நிறைவு செய்து பணியாளர் மட்டத்திலான உடன்படிக்கையினை எட்டுவதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

2023 ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதிவரையிலான நிலவரம் தொடர்பாக 2 வாரங்களுக்கு மீளாய்வு செய்யப்படவுள்ளதுடன் மூன்றாவது தவணையை பெற்றுக்கொள்வதற்கான பணிகள் ஆரம்பிப்பதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கடன்மறுசீரமைப்பு திட்டத்தில் பாரிய முன்னேற்றம் காணப்படுவதுடன் கடன்வழங்குனர்களுடன் ஆரம்பகட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் எக்ஸ் வலைத்தளப்பதிவில் நிதிராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...