கட்சிகள், சுயேச்சைக் குழுக்களிடமிருந்து அறவிடப்படும் கட்டுப் பணத்தை அதிகரிக்க தீர்மானம்!

Date:

தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களிடமிருந்து அறவிடப்படும் கட்டுப்பணத்தை அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அது தொடர்பில் பிரேரணையொன்றை முன் வைத்துள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ எல். ரத்நாயக்க தெரிவித்தார்.

தற்போதுள்ள கட்டுப்பணம் குறைவானதாக காணப்படுவதால்  வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு அவ்வாறு வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது வாக்காளர்களுக்கு வாக்களிப்பதற்கு அசௌகரியங்கள் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் தற்போது தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு தேசிய அடையாள அட்டை உள்ளிட்ட அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணம் அவசியம் என்பது  சட்டமாக்கப்பட்டுள்ளதால், முறைகேடுகளை தடுக்கும் வகையில்  தற்போதும் நடைமுறையிலுள்ள விரலுக்கு மை பூசுவதை இரத்துச்செய்யவும் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, தேர்தலுக்கு தேர்தல் வேட்பாளர்களின் தேர்தல் செலவின தொகை வித்தியாசப்படும் நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் அதுதொடர்பான வழிகாட்டல் ஒன்றை தேர்தல் ஆணைக்குழுவி ஊடகங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

வெளிநாடுகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான இழப்பீடு அதிகரிப்பு!

வெளிநாடுகளில் பணிபுரியும்போது உயிரிழக்கும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை...

அஷ்ரப் மருத்துவமனையில் கட்டண வார்டை திறந்து வைத்த சுகாதார அமைச்சர்

கல்முனை அஷ்ரப் நினைவு மருத்துவமனையின் சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாட்டின் ஒரு பகுதியாக...

“Disrupt Asia 2025”: டிஜிட்டல் பொருளாதாரமும் புத்தாக்கத்தையும் முன்னிறுத்தும் மாநாடு

நாட்டின் முன்னணி புதிய தொழில்முனைவோர் மாநாடு மற்றும் புத்தாக்க விழாவான “Disrupt...

ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 6 மாகாணங்களில் இணைய சேவைக்கு தடை

ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 6 மாகாணங்களில் ஃபைபர் ஆப்டிக் இணைய சேவைக்கு...