சஜித், சொந்தக் கட்சி உறுப்பினர்களையே புறக்கணிக்கிறார்: குளியாப்பிட்டியில் ஜனாதிபதி

Date:

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சொந்தக் கட்சி உறுப்பினர்களை புறக்கணித்து, வெளியாட்களுக்கு செவிசாய்த்து வருகிறார்.

இதன் காரணமாகவே கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் பங்குபற்ற போவதில்லை என தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று தெரிவித்துள்ளார்.

குளியாப்பிட்டியில் நடைபெற்ற கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

சஜித் பிரேமதாச உண்மையில் கலாநிதி ஹர்ஷ டி சில்வா போன்ற தனது சொந்தக் கட்சி உறுப்பினர்களை புறக்கணிக்கவும் ஓரங்கட்டவும் ஆரம்பித்துவிட்டார் என ஜனாதிபதி   தெரிவித்தார்.

“டாக்டர். டி சில்வா, கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையில் எதிர்க்கட்சிகளை ஈடுபடுத்துமாறு என்னிடம் கோரினார். அதன்படி IMF மற்றும்  பிரதிநிதிகளை சந்திப்பதில் எங்களுடன் இணைந்து கொள்ள எதிர்க்கட்சித் தலைவரை அழைத்தேன்.

எவ்வாறாயினும், அந்தக் கூட்டங்களில் பங்கேற்க தமது கட்சி விரும்பவில்லை என சஜித்  பிரேமதாச என்னிடம் தெரிவித்தார். எனது கோரிக்கையை புறக்கணிக்குமாறு பிரேமதாசாவை ஊக்குவித்தவர் ஜி.எல்.பீரிஸ்.

பிரேமதாச உண்மையில் தனது சொந்தக் கட்சி உறுப்பினர்களை புறக்கணிக்க ஆரம்பித்துள்ளார்.  எனவே கடந்த காலங்களில் என்னை எதிர்த்தவர்களை எம்முடன் இணையுமாறு அழைக்கிறேன் என ஜனாதிபதி தெரிவித்தார்.

Popular

More like this
Related

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல் இராணுவம் தீவிரம்

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல்...

இலங்கையில் நாளொன்றுக்கு 5 பேர் கிட்னி நோயினால் இறக்கின்றனர்: சுகாதார மேம்பாட்டுப் பணியகம்

நாட்டில் சிறுநீரக நோய்கள் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 1,600 பேர் உயிரிழக்கின்றனர்....

கொழும்பில் நாளை நீர் விநியோகம் துண்டிக்கப்படாது!

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை (18) காலை 10.00 மணி...

இஸ்ரேலை ஐநாவிலிருந்து இடை நிறுத்துக: பலஸ்தீனுக்கு முழு உறுப்புரிமை வழங்குக-தேசிய ஆலோசனை சபை கோரிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு தேசிய சூறா...