சஜித், சொந்தக் கட்சி உறுப்பினர்களையே புறக்கணிக்கிறார்: குளியாப்பிட்டியில் ஜனாதிபதி

Date:

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சொந்தக் கட்சி உறுப்பினர்களை புறக்கணித்து, வெளியாட்களுக்கு செவிசாய்த்து வருகிறார்.

இதன் காரணமாகவே கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் பங்குபற்ற போவதில்லை என தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று தெரிவித்துள்ளார்.

குளியாப்பிட்டியில் நடைபெற்ற கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

சஜித் பிரேமதாச உண்மையில் கலாநிதி ஹர்ஷ டி சில்வா போன்ற தனது சொந்தக் கட்சி உறுப்பினர்களை புறக்கணிக்கவும் ஓரங்கட்டவும் ஆரம்பித்துவிட்டார் என ஜனாதிபதி   தெரிவித்தார்.

“டாக்டர். டி சில்வா, கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையில் எதிர்க்கட்சிகளை ஈடுபடுத்துமாறு என்னிடம் கோரினார். அதன்படி IMF மற்றும்  பிரதிநிதிகளை சந்திப்பதில் எங்களுடன் இணைந்து கொள்ள எதிர்க்கட்சித் தலைவரை அழைத்தேன்.

எவ்வாறாயினும், அந்தக் கூட்டங்களில் பங்கேற்க தமது கட்சி விரும்பவில்லை என சஜித்  பிரேமதாச என்னிடம் தெரிவித்தார். எனது கோரிக்கையை புறக்கணிக்குமாறு பிரேமதாசாவை ஊக்குவித்தவர் ஜி.எல்.பீரிஸ்.

பிரேமதாச உண்மையில் தனது சொந்தக் கட்சி உறுப்பினர்களை புறக்கணிக்க ஆரம்பித்துள்ளார்.  எனவே கடந்த காலங்களில் என்னை எதிர்த்தவர்களை எம்முடன் இணையுமாறு அழைக்கிறேன் என ஜனாதிபதி தெரிவித்தார்.

Popular

More like this
Related

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...

2025 இல் இலங்கை இறக்குமதி செய்துள்ள வாகனங்களின் விபரம்!

இந்த ஆண்டு இதுவரை இலங்கை 220,000 க்கும் மேற்பட்ட வாகனங்களை இறக்குமதி...

பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற வானிலை

இன்றையதினம் (04) நாட்டின் சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடக்கு மாகாணங்களிலும் திருகோணமலை...