சுதந்திர பலஸ்தீனத்தை உருவாக்குவதற்கு ஸ்பெய்ன் பாராளுமன்றத்தில் முன்மொழி!

Date:

ஸ்பெய்ன் பாராளுமன்றத்தில் ஒரு மசோதாவை கொண்டு வந்து சுதந்திர பலஸ்தீனத்தை உருவாக்குவதற்கு அங்கீகாரத்தை பெற விரும்புவதாக ஸ்பெய்ன் பிரதமர் பெட்ரோ சன்செஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விசேட கருத்தொன்றை வெளியிட்டுள்ளார்.

இதன்போது மனித பண்பாடுகளின் அடிப்படையிலும் நீதியின் அடிப்படையிலும் சுதந்திர பலஸ்தீனத்தை உருவாக்க வேண்டிய தேவைப்பாடு இருக்கின்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் காசா விடயத்தில் மேற்கொள்கின்ற மோசமான தாக்குதல்கள் காரணமாக இஸ்ரேலுக்கும் ஸ்பெயினுக்கும் இடையிலுள்ள உறவுகள் சீர்குலைந்துள்ள நிலையில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

‘பாலஸ்தீன அரசுக்கு ஸ்பெயினின் அங்கீகாரத்தை வழங்க நான் முன்மொழிகிறேன்,’ நான் இதை தார்மீக நம்பிக்கையுடன் செய்கிறேன், ஒரு நியாயமான காரணத்திற்காகவும், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளும் ஒன்றாக வாழ ஒரே வழி இதுதான் எனவும் அவர் தெரிவித்தார்.

 

Popular

More like this
Related

இலங்கையின் மூன்றாவது நெனோ செயற்கைக்கோள் விண்வெளிக்கு!

உள்ளூர் பொறியாளர்களின் தொழில்நுட்ப பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட மூன்றாவது நெனோ செயற்கைக்கோளை இன்று...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (19) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடக்கு, வடமேல் மாகாணங்களிலும்...

செப்டம்பர் 17-19 திகதிகளில் இந்தோனேசியாவில் நடைபெறும் மதங்களுக்கிடையிலான கருத்தரங்கு!

அஷ்ஷைக்.எஸ்.எச்.எம். பளீல் இந்தோனேசியாவில் இருந்து... "மத சுதந்திரமும் ஆசியாவில் மத சிறுபான்மையினது உரிமைகளும்"...

2025 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 300 கொலைச் சம்பவங்கள் பதிவு.

2025 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 300 கொலைச் சம்பவங்கள்...