அருட்தந்தை சிறில் காமினி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம்!

Date:

கொழும்பு பேராயர் இல்லத்தின் ஊடகப்பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் விசாரிப்பதற்காக அருட்தந்தை சிறில் காமினி இன்று காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு வருகை தருமாறு ஏற்கனவே அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி தற்போது அவர் இன்று காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்குச் சென்று வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான உண்மைகள் தனக்கு தெரியும் என்றும் எனவே அது தொடர்பாக விசாரிப்பதற்கு அழைக்கப்பட்டதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் அனுப்பப்பட்ட கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததாக அருட்தந்தை சிறில் காமினி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...