ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையை நாடும் பேராயர்!

Date:

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணையை முன்னெடுக்குமாறு கோரி கத்தோலிக்க திருச்சபை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையை நாடவுள்ளது.

பி.பி.சி சிங்கள செய்தி சேவைக்கு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் நேற்று (21) இந்த விடயத்தினை அறிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று 05 வருடங்கள் கடந்துள்ள போதிலும் தாக்குதல்களின் பின்னணியில் உள்ள சதி மற்றும் அதற்கு மூளையாக செயற்பட்டவர்கைளை தற்போதைய அரசாங்கமும் முன்னர் இருந்த அரசாங்கமும் வெளிப்படுத்தத் தவறிவிட்டதாக குற்றம் சாட்டினார்.

“பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற்றுத் தருவதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எமக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற தவறியுள்ளார்.

அதேபோன்று, இந்த தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எழுத்து மூல கடிதம் அனுப்பியுள்ளோம். அதற்கும் எவ்வித பதிலும் கிடைக்கவில்லை.

வெளிகொணரப்பட்டுள்ள புதிய விடயங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பலமுறை கோரினாலும் அரசாங்கம் அதனை கவனத்தில் எடுக்காமை தெளிவாக புலப்படுகின்றது.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...