ஊடகவியலாளர் அசாம் அமீனை பணியில் இருந்து நிறுத்தியதற்காக பிபிசிக்கு எதிராக தொழிலாளர் நீதிமன்றம் தீர்ப்பு!

Date:

இலங்கையைச் சேர்ந்த பிரபல ஊடகவியலாளர் அசாம் அமீனை, ஒப்பந்தம் காலம் நிறைவடைவதற்கு முன்னர் பணியில் இருந்து நிறுத்தியதற்காக பிபிசிக்கு எதிராக இலங்கை தொழிலாளர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பிபிசி, ஊடகவியலாளர்  அசாம் அமீனின் ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தமை நியாயமற்றது என்று தொழிலாளர் நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியது.

அதன்படி, இழப்பீடு வழங்கவும் பிபிசிக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வாய்மூலத் தீர்ப்பை வழங்கிய நீதிபதி, அடுத்த வாரம் முழு உத்தரவை வழங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் அஸாம் அமீன் கலந்துரையாடிய குரல் பதிவு ஒன்றை சிங்க லே அமைப்பு வெளியிட்டிருந்த நிலையில் அப்போது அசாம் அமீன் 2020 ஆம் ஆண்டு பிபிசியில் இருந்து பதவி விலக்கப்பட்டிருந்தார்.

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...