சகவாழ்வை பலப்படுத்திய மற்றொரு இரத்ததான முகாம்!

Date:

புத்தளம் ஆதார வைத்தியசாலையில் ஏற்பட்டிருந்த இரத்தத் தட்டுப்பாட்டை நீக்கும் வகையில் கௌரவத்துக்குரிய மாதம்பாகம அஸ்ஸஜிதேரர் அவர்களின் தலைமையில் இயங்கும் தர்ம சக்தி நிறுவனமும்,கொள்ளுப்பிட்டி மஜ்ஸித் சம்மேளனமும் புத்தளம் நகர சபையுடன் இணைந்து சிறப்பான இரத்ததான முகாமை நேற்றைய தினம் புத்தளம் நகர சபை மண்டபத்தில் நடாத்தியது.

தர்மசக்தி நிறுவனத்தின் புத்தளம் மாவட்ட இணைப்பாளர் ருமைஸ், கொள்ளுப்பிட்டி மஸ்ஜித் சம்மேளனத் தலைவர் அல்ஹாஜ் ரிஸான் மற்றும் சர்வசமய பிரமுகர்கள் உட்பட பிரதேசத்தின் சகவாழ்வு பணியில் ஆர்வமுள்ள ஆண்கள், பெண்கள்இ இளைஞர்கள்என பல்வேறு தரப்பினரும் இம்முகாமில் கலந்துகொண்டு இரத்த தானம் வழங்கினர்.

50 இற்கும் மேற்பட்டோர் இம்முகாமில் தமது இரத்தங்களை தானம் செய்து வைத்தியசாலையின் இரத்தத்தட்டுப்பாட்டை நீக்குவதற்காக பங்களிப்பு செய்தமையை குறித்து தர்ம சக்தியின் மாவட்ட அமைப்பாளர் திரு. ஏசி.எம். ருமைஸ் அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார்.

 

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...