தன்பால் ஈர்ப்பு திருமணங்களை குற்றமாக்கிய ஈராக்

Date:

ஒரு பால் உறவுக்கு 10 தொடக்கம் 15 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கும் வகையில் அதனை குற்றமாக்கும் சட்டமூலம் ஒன்று ஈராக் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த புதிய சட்டத்தின் கீழ் பாலினத்தை மாற்றிக் கொண்டவர்களும் ஒன்று தொடக்கம் மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனைக்கு முகம்கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதேபோன்று ஓரினச் சேர்க்கை மற்றும் விபச்சாரத்தை ஊக்குவிப்பவர்களுக்கு குறைந்தது ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க முடியும்.

இது நாட்டின் மதப் பெறுமானங்களை உறுதிப் படுத்துவதாக உள்ளது என்று இந்த புதிய சட்டத்திற்கு ஆதரவானவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது ஈராக்கிற்கு கறுப்புப் புள்ளியாக உள்ளது என்று உரிமைக் குழுக்கள் தெரிவித்துள்ளன. கடந்த சனிக்கிழமை பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட்ட இந்த சட்டமூலத்திற்கு மிகப்பெரிய கூட்டணியைக் கொண்டுள்ள பழைமைவாத ஷியா முஸ்லிம் கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன.

இதில் ஒருபாலுறவுக்கு மரண தண்டனை விதிக்க ஆரம்பத்தில் பரிந்துரைக்கப்பட்டபோதும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கடும் எதிர்ப்பை அடுத்து அதில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

காசா படுகொலைக்கு எதிராக சென்னையில் மாபெரும் போராட்டம்

இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் மக்கள் கொல்லப்படுவதற்கு எதிராக சென்னையில் போராட்டம் நடைபெற்றது. பலஸ்தீனத்தில்...

வெளிநாடுகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான இழப்பீடு அதிகரிப்பு!

வெளிநாடுகளில் பணிபுரியும்போது உயிரிழக்கும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை...

அஷ்ரப் மருத்துவமனையில் கட்டண வார்டை திறந்து வைத்த சுகாதார அமைச்சர்

கல்முனை அஷ்ரப் நினைவு மருத்துவமனையின் சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாட்டின் ஒரு பகுதியாக...

“Disrupt Asia 2025”: டிஜிட்டல் பொருளாதாரமும் புத்தாக்கத்தையும் முன்னிறுத்தும் மாநாடு

நாட்டின் முன்னணி புதிய தொழில்முனைவோர் மாநாடு மற்றும் புத்தாக்க விழாவான “Disrupt...