துருக்கியில் இரவு நேர கேளிக்கை விடுதியில் தீ விபத்து – 29 பேர் பலி!

Date:

துருக்கியின் இஸ்தான்புலில் உள்ள இரவு நேர கேளிக்கை விடுதியில் சீரமைப்பு பணிகள் நடைபெற்றுள்ளது.

அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தீ விபத்தில் ஏறத்தாழ 29 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த கோர விபத்தில் ஏறத்தாழ 13 பேர் வரை படுகாயங்களுடன் மீட்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 7 பேர் தீவிர தீக்காயங்களுடன் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருவதாக கூறப்பட்டு உள்ளது. பெஸ்கிடாஸ் மாவட்டத்தில் உள்ள இந்த இரவு நேர கேளிக்கை விடுதி 16 மாடி கட்டடத்தின் தரைதளத்தில் அமைந்து உள்ளது.

புனரமைப்பு பணிகளுக்காக விடுதி மூடப்பட்டு இருந்த நிலையில், திடீரென தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

தீ விபத்துக்கான காரணம் தெரியவராத நிலையில் அதுகுறித்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

மேலும், இந்த தீ விபத்து சம்பவம் தொடர்பாக சிலரை தடுப்பு காவலில் வைத்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Popular

More like this
Related

உயர்தர பரீட்சை பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவிப்பு!

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து அனுமதி அட்டைகளும் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக...

டிரம்ப் உருவாக்கிய நகரமே, அவரைத் தோற்கடிக்கும்: மம்தானியின் வெற்றி உரை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை, அவரால் உருவாக்கப்பட்ட நகரமே தோற்கடிக்கும் என்று...

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக முதல் முஸ்லிம் ஸோரான் மம்தானி தேர்வு.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்...

வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குள்ளான தேவாலயங்களுக்கு விஜயம்

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் பேராயர்...