பிரபல சிங்கள நடிகை தமிதா மற்றும் அவரது கணவர் கைது

Date:

 

கொரியாவில் வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோட்டை நீதவான் நீதிமன்றில் சரணடைந்ததையடுத்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவரைக் கைது செய்வதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சுமார் முப்பது அதிகாரிகள் கொண்ட பொலிஸ் படையொன்று கோட்டை நீதிமன்றத்திற்கு வருகை தந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கடந்த 2ஆம் திகதி, குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் இவர்களை கைது செய்வதை தடுக்கும் இடைக்கால உத்தரவை பிறப்பிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் மறுத்துள்ளது.

 

Popular

More like this
Related

கோபா குழுவின் தலைவர் பதவி கபீர் ஹாசிமுக்கு..!

பாராளுமன்ற பொதுக் கணக்குகள் குழுவின் (கோபா) (COPA) தலைவர் பதவிக்கு கபீர்...

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாகின்றன!

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாவதாக தேசிய...

நாட்டின் சில பிரதேசங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்!

இன்றையதினம் (07) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி,...

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...