புத்தளம் காதி நீதிபதி முஹம்மத் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது

Date:

புத்தளம் மாவட்டத்தில் காதி நீதிபதியாக செயற்பட்டுவந்த முஹம்மத் காதியார்  இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யட்டார்.

இந்த விடயத்தை பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்கள் உறுதிப்படுத்தினார்.

விவாகரத்து வழக்கு தொடர்பில் 5000 ரூபாவை இலஞ்சமாக பெற்றுக்கொண்டதற்கமைய அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

புத்தளம் காதி நீதிபதியின் ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பல்வேறு விடயங்களை கடந்த காலங்களில் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி  வெளியிட்டிருந்தார்.

பலரும் இதற்கு ஒத்துழைப்பு வழங்கியதற்கமைய தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார்.

புத்தளம் காதி நீதிமன்றத்தின் காதியார் பொறுப்பை ஏற்ற அன்றே நீதிக்கு தீர்ப்பு என்ற நடப்பு மாறி நிதிக்கு தீர்ப்பு என்று கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

உயர்தர பரீட்சை பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவிப்பு!

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து அனுமதி அட்டைகளும் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக...

டிரம்ப் உருவாக்கிய நகரமே, அவரைத் தோற்கடிக்கும்: மம்தானியின் வெற்றி உரை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை, அவரால் உருவாக்கப்பட்ட நகரமே தோற்கடிக்கும் என்று...

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக முதல் முஸ்லிம் ஸோரான் மம்தானி தேர்வு.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்...

வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குள்ளான தேவாலயங்களுக்கு விஜயம்

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் பேராயர்...