மாலைதீவு நாடாளுமன்ற தேர்தல்: ஜனாதிபதி முகம்மது முய்சுவின் கட்சி அமோக வெற்றி

Date:

நடைபெற்று முடிந்த மாலைதீவின் 20 ஆவது  நாடாளுமன்றத் தேர்தலில் அந்நாட்டின் ஜனாதிபதியான முகம்மது முய்சுவின் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.

நேற்றைய தினம் இடம்பெற்ற  குறித்த தேர்தலில் ஜனாதிபதி முய்சுவின் கட்சியான   மக்கள் தேசிய காங்கிரஸ் மொத்தமுள்ள 93 தொகுதிகளில் 66 இடங்களை வென்றுள்ளது.

இது நாடாளுமன்றத்தில் 3-இல் 2 பங்காகும். இந்த வெற்றியைத் தொடர்ந்து முய்சு தனது சீன ஆதரவு செயற்பாடுகளை அதிகரிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தேர்தலுக்கு முன்பு முய்சுவின் பிஎன்சி கட்சிக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் சேர்ந்தே வெறும் 8 எம்பிக்கள் மட்டுமே இருந்தார்கள். இதனால் அவரால் விரும்பிய சட்டங்களை எளிதாகக் கொண்டு வர முடியவில்லை.

முகம்மது முய்சு எதாவது சட்டத்தைக் கொண்டு வர முயன்றால் நாடாளுமன்றத்தில் முறியடிக்கப்பட்டு வந்தது.

தற்போது நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைத்துள்ளதால், முகம்மது முய்சு நினைத்த சட்டங்களை நிறைவேற்ற முடியும்.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...