வடக்கு, கிழக்கு மக்களின் ஆதரவின்றி நாட்டை முன்னேற்ற முடியாது: அனுர

Date:

வடக்கு, கிழக்கில் வாழும் மக்களின் ஆணையில்லாமல் நாட்டை முன்னேற்ற முடியாது என ஜே.வி.பியின் தலைவரான அநுரகுமார திஸாநாயக்க கேட்டுக் கொண்டார்.

அதேநேரம் அனைத்து இன மக்களின் பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு, முன்னேற்றகரமான இலங்கையை கட்டியெழுப்ப அனைவரும் தங்களுக்கு ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கத்தின் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர்  இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதன்போது இன,மத, மொழி கடந்து ஒற்றுமையுடன் நாம் பயணிக்கும் போதே இந்த நாட்டை முன்னேற்ற முடியும்.

எனவே, எமக்கான ஆதரவை அனைவரும் ஒருமித்து வழங்க வேண்டும் என நாம் கேட்டுக் கொள்கிறோம். அவ்வாறு சகலரது ஒத்துழைப்புடனும் ஆதரவுடனும் அரசாங்கம் அமைக்கப்படும்போது எந்தவித பாகுபாடுகளுமின்றி ஆட்சி நடைபெறும்.

இதனூடாக நீண்ட காலமாக இருந்து வருகின்ற பிரிவினை அரசியலுக்கு முடிவு காட்டி இன, மத பேதமில்லாத ஒன்றிணைந்த அரசியலை மேற்கொள்ள முடியும்.

இந்த பயணத்தில், அனைவரும் எம்முடன் இணைய வேண்டும். அனைவரும் சம உரிமைகளுடன் சந்தோசமாகவும் நிம்மதியாகவும் வாழக் கூடியதான ஆட்சி அமையப் பெறுவதற்கு எமக்கான ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்குமாறு நான் தமிழ் தலைவர்களிடன் கேட்டுக் கொள்கிறேன்” இவ்வாறு அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

 

Popular

More like this
Related

வித்யா கொலை வழக்கு; குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு

2015-ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாடசாலை மாணவி சிவலோகநாதன்...

சிறுவர்களின் டிஜிட்டல் பாதுகாப்பை உறுதி செய்யப் புதிய கொள்கை!

சிறுவர்கள் டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் சமூக ஊடகங்களை மேற்பார்வையின்றிப் பயன்படுத்துவதால் ஏற்படும்...

தவெகவுக்கு ஆதரவு அளிக்க முடிவு: காங்கிரஸ் விதித்த நிபந்தனை!

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க ஆதரவளித்துள்ள காங்கிரஸ், அக்கட்சிக்கு ஒரேவொரு...

விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

டெங்கு அபாயம் அதிகமுள்ள வலயங்களை இலக்காகக் கொண்டு இன்று (06) விசேட...