அமெரிக்கவின் எலைட் சர்வதேச வான் பல்கலைக்கழகத்தில் இணைகிறார் இலங்கை விமானப்படை தளபதி

Date:

இலங்கை விமானப்படை தளபதி அமெரிக்கவின் எலைட் சர்வதேச வான் பல்கலைக்கழகத்தின் மதிப்புக்குரிய பழைய மாணவராக இணைகின்றார்.

அலபாமா மேக்ஸ்வெல் விமானப்படை தளத்தில் அமைந்துள்ள வான் பல்கலைக்கழகத்தின் சர்வதேச மரியாதை பட்டியல் (International Honour Roll) அறிமுக விழா கடந்த 2024 ஏப்ரல் 19ஆம் திகதி இடம்பெற்றது.

இதன்போது அந்தப் பல்கலைக்கழகத்தில் பயின்ற 21 முன்னாள் சர்வதேச மாணவர்கள் கௌரவப்படுத்தப்பட்டனர்.

இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்களும் இந்த கௌரவ பட்டியலில் இதன்போது இணைந்து கொள்கின்றார்.

சர்வதேச வான் பல்கலைக்கழகத்தினால் சர்வதேச மரியாதை பட்டியல் (International Honour Roll) கௌரவமளிப்பு அந்த பல்கலைக்கழகத்தில் உயர் கல்வியை கற்ற இராணுவ மற்றும் முதன்மை சிவில் பிரிவில் கடமையாற்றும் வெளிநாட்டு அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட கட்டளை இல்லாத அதிகாரிகளுக்கு வழங்கி கௌரவிக்கப்படும்.

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...