இஸ்லாமிய ஐக்கிய பேரவைக்கு தப்லிக் ஜமாஅத் ஏற்பாடு செய்த விசேட இப்தார் நிகழ்வு!

Date:

இலங்கை முஸ்லிம்களின் ஒற்றுமைக்காக உழைக்கின்ற இஸ்லாமிய ஐக்கிய பேரவைக்கு தப்லிக் ஜமாஅத் மர்க்கஸில் இன்று இப்தார் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த இப்தார் நிகழ்வில் இஸ்லாமிய ஐக்கிய பேரவையின் ஸ்தாபகர்கள் உட்பட ஐக்கிய பேரவையில் அங்கம் வகிக்கின்ற பல்வேறு அமைப்புக்களின் அங்கத்தவர்கள் கலந்துகொண்டார்கள்.

இவர்களோடு தப்லிக் ஜமாஅத் மர்க்கஸின் மசூறா சபை அங்கத்தவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இஸ்லாமிய ஐக்கிய பேரவையில் முஸ்லிம் சமய கயலாசார தினைக்களம், ஸ்ரீலங்கா ஹஜ் கமிட்டி, வக்பு சபை, தரீக்காக்களின் சுப்ரிம் கவுன்சில், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி, அகில இலங்கை சூபி ஆன்மிக பேரவை, அகில இலங்கை தௌஹித் ஜமாஅத் உள்ளிட்ட 30 அமைப்புக்கள் அங்கம் வகிக்கின்றன.

சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த இப்தார் நிகழ்வினை ஏற்பாடு செய்தமைக்காக இஸ்லாமிய ஐக்கிய பேரவையின் ஸ்தாபகர்கள் தப்லிக் ஜமாஅத் சூறா சபைக்கும் அதன் அங்கத்தவர்களுக்கும் தமது நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.

 

Popular

More like this
Related

Operation Hawkeye Strike: சிரியாவில் உள்ள ISIS இலக்குகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்.

சிரியாவில், ஐஎஸ்ஐஎஸ் இலக்குகளைக் குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியாவின், மத்திய...

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உலக வங்கி நிதியுதவி

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு...

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...