”கடந்த மூன்று ஆண்டுகளில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக மட்டும் 11 விவாதங்கள் நாடாளுமன்றத்தில் நடைபெற்றுள்ளன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நாட்டின் நாடாளுமன்ற வரலாற்றில் ஒரே விடயம் தொடர்பில் அதிகளவான விவாதங்கள் இடம்பெற்றமை இதுவே முதல் முறை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி விவாதங்கள் மே 7, 8, 10, 2019 மற்றும் மார்ச் 10, 25, 26, 2021, ஏப்ரல் 7, 8, 9 மற்றும் செப்டம்பர் 21 மற்றும் 22, 2023 ஆகிய திகதிகளில் நடைபெற்றன.
மேலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான மற்றொரு மூன்று நாள் விவாதம் இந்த ஆண்டு ஏப்ரல் 24, 25 மற்றும் 26 ஆகிய திகளில் நடைபெற உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.