ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விவாதம் நடத்த மட்டும் நாடாளுமன்ற கூட்டத்துக்கு 13 கோடிக்கும் மேல் செலவு!

Date:

”கடந்த மூன்று ஆண்டுகளில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக மட்டும் 11 விவாதங்கள் நாடாளுமன்றத்தில் நடைபெற்றுள்ளன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கூறிய விவாதத்துக்காக 11 நாட்கள் நடைபெற்ற கூட்டத்துக்காக 13 கோடியே இருபது லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

இந்த நாட்டின் நாடாளுமன்ற வரலாற்றில் ஒரே விடயம் தொடர்பில் அதிகளவான விவாதங்கள் இடம்பெற்றமை இதுவே முதல் முறை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி விவாதங்கள் மே 7, 8, 10, 2019 மற்றும் மார்ச் 10, 25, 26, 2021, ஏப்ரல் 7, 8, 9 மற்றும் செப்டம்பர் 21 மற்றும் 22, 2023 ஆகிய திகதிகளில் நடைபெற்றன.

மேலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான மற்றொரு மூன்று நாள் விவாதம் இந்த ஆண்டு ஏப்ரல் 24, 25 மற்றும் 26 ஆகிய திகளில் நடைபெற உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...