உலகின் மிக வயதான நபர் காலமானார்

Date:

உலகின் மிக வயதான மனிதர் என கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்த, வெனிசுலா நாட்டைச் சேர்ந்த ஜூவான் வின்சென்ட் பெரெஸ் தனது 114 ஆவது வயதில் காலமாகியுள்ளார்.

2022 ஆம் ஆண்டு இவர் தனது 112 ஆவது வயதில் உலகின் மிக வயதான மனிதராக கின்னஸ் உலக சாதனை படைத்தார்.

 வெனிசுலாவின் எல் கோப்ரே பகுதியில் 1909 ஆம் ஆண்டு பெரெஸ் மோரா மற்றும் எடெல்மிரா மோரா தம்பதியருக்கு 9வது குழந்தையாக பிறந்தார் ஜூவான் விசென்ட் மோரா. விவசாய குடும்பத்தை சேர்ந்த ஜுவான், தனது 34 வயதில் ஷெரிஃப்-ஆக பதவியேற்றார்.

உள்ளூரிலேயே கரும்பு மற்றும் காபி பயிரிட்டுவந்த ஜுவானின் குடும்பம், விவசாயத்தின் மீது அதிக பற்று கொண்டிருந்தது. ஆகவே, பின்னாளில் ஜூவானும் விவசாயத்தில் ஈடுபட்டார். தனது 104 வயது வரையிலும் விவசாய பணிகளை ஆர்வத்துடன் மேற்கொண்டுவந்த ஜுவான் அதன்பிறகு ஓய்வெடுக்க இருப்பதாக அறிவித்தார்.

அதிகமாக காபி குடிக்கும் வழக்கமுள்ள ஜுவான், குடும்பத்தாருடன் அதிக நேரம் செலவிடுவதையே அதிகம் விரும்புவதாக கூறுகிறார்.

Popular

More like this
Related

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...

2025 இல் இலங்கை இறக்குமதி செய்துள்ள வாகனங்களின் விபரம்!

இந்த ஆண்டு இதுவரை இலங்கை 220,000 க்கும் மேற்பட்ட வாகனங்களை இறக்குமதி...