உலகின் மிக வயதான நபர் காலமானார்

Date:

உலகின் மிக வயதான மனிதர் என கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்த, வெனிசுலா நாட்டைச் சேர்ந்த ஜூவான் வின்சென்ட் பெரெஸ் தனது 114 ஆவது வயதில் காலமாகியுள்ளார்.

2022 ஆம் ஆண்டு இவர் தனது 112 ஆவது வயதில் உலகின் மிக வயதான மனிதராக கின்னஸ் உலக சாதனை படைத்தார்.

 வெனிசுலாவின் எல் கோப்ரே பகுதியில் 1909 ஆம் ஆண்டு பெரெஸ் மோரா மற்றும் எடெல்மிரா மோரா தம்பதியருக்கு 9வது குழந்தையாக பிறந்தார் ஜூவான் விசென்ட் மோரா. விவசாய குடும்பத்தை சேர்ந்த ஜுவான், தனது 34 வயதில் ஷெரிஃப்-ஆக பதவியேற்றார்.

உள்ளூரிலேயே கரும்பு மற்றும் காபி பயிரிட்டுவந்த ஜுவானின் குடும்பம், விவசாயத்தின் மீது அதிக பற்று கொண்டிருந்தது. ஆகவே, பின்னாளில் ஜூவானும் விவசாயத்தில் ஈடுபட்டார். தனது 104 வயது வரையிலும் விவசாய பணிகளை ஆர்வத்துடன் மேற்கொண்டுவந்த ஜுவான் அதன்பிறகு ஓய்வெடுக்க இருப்பதாக அறிவித்தார்.

அதிகமாக காபி குடிக்கும் வழக்கமுள்ள ஜுவான், குடும்பத்தாருடன் அதிக நேரம் செலவிடுவதையே அதிகம் விரும்புவதாக கூறுகிறார்.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...