கொழும்பு பள்ளிவாசல்களுக்கு சவூதி தூதுவர் ஈத்தம்பழ விநியோகம்!

Date:

நல்லெண்ணம் மற்றும் கலாசார பரிமாற்றத்தை வெளிப்படுத்தும் வகையில், இரண்டு புனிதஸ்தலங்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அவர்களினால் பரிசாக வழங்கப்பட்ட பேரீச்சம்பழங்களை இலங்கைக்கான சவூதி தூதுவர் மேதகு காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி கொழும்பில் உள்ள பல பள்ளிவாசல்களுக்கு வழங்கி வைத்தார்.

பேரீச்சம்பழங்களை விநியோகிப்பதில் தூதுவரின் தனிப்பட்ட ஈடுபாடு, இந்த நல்லெண்ணச் செயலின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுவதாக அமைந்திருந்தது.

ஜாவத்தை பள்ளிவாசல், கொள்ளுப்பிட்டி பள்ளிவாசல், வெள்ளவத்தை பள்ளிவாசல், பெரிய பள்ளிவாசல், சிவப்புப் பள்ளிவாசல் மற்றும் ஸாஹிரா பள்ளிவாசல் ஆகியற்றுக்கு சவூதி தூதுவர் பேரீச்சம்பழங்களை வழங்கி வைத்தார்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...