கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ள உதவி தேர்தல்கள் ஆணையாளர்கள்: ஒழுங்குபடுத்தல் நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு

Date:

ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளதால்  அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பிரதி மற்றும் உதவி தேர்தல்கள் ஆணையாளர்கள் கொழும்புக்கு இன்று புதன்கிழமை அழைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இன்று முதல் எதிர்வரும் மூன்று நாள் செயலமர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக  தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்போது, தேர்தல் செலவுகள் ஒழுங்குபடுத்தல் சட்டத்தை செயற்படுத்துவதுவதற்கு போதிய தெளிவுப்படுத்தல்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்காக தேர்தல் செலவுகள் ஒழுங்குபடுத்தல் தொடர்பில் சர்வதேச அனுபவம் கொண்ட விசேட நிபுணர்களின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக ரத்நாயக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஜூலை மாத இறுதியில் அல்லது ஒகஸ்ட் மாத முதல் வாரத்தில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அறிவிக்கப்படுமென தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அண்மையில் அறிவித்திருந்தது.

இந்நிலையில் தற்போது செப்டம்பர் மாதம் 17ஆம் திகதிக்கும் ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதிக்கும் இடையேயான காலப்பகுதிக்குள் ஜனாதிபதி தேர்தல் நடாத்தப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல்.ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...