கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ள உதவி தேர்தல்கள் ஆணையாளர்கள்: ஒழுங்குபடுத்தல் நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு

Date:

ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளதால்  அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பிரதி மற்றும் உதவி தேர்தல்கள் ஆணையாளர்கள் கொழும்புக்கு இன்று புதன்கிழமை அழைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இன்று முதல் எதிர்வரும் மூன்று நாள் செயலமர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக  தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்போது, தேர்தல் செலவுகள் ஒழுங்குபடுத்தல் சட்டத்தை செயற்படுத்துவதுவதற்கு போதிய தெளிவுப்படுத்தல்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்காக தேர்தல் செலவுகள் ஒழுங்குபடுத்தல் தொடர்பில் சர்வதேச அனுபவம் கொண்ட விசேட நிபுணர்களின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக ரத்நாயக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஜூலை மாத இறுதியில் அல்லது ஒகஸ்ட் மாத முதல் வாரத்தில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அறிவிக்கப்படுமென தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அண்மையில் அறிவித்திருந்தது.

இந்நிலையில் தற்போது செப்டம்பர் மாதம் 17ஆம் திகதிக்கும் ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதிக்கும் இடையேயான காலப்பகுதிக்குள் ஜனாதிபதி தேர்தல் நடாத்தப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல்.ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...