சஜித்துடன் இணைந்த மொட்டு உறுப்பினர்களுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை?

Date:

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 06 பேர் அண்மையில் ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்தமை தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு கூட்டம் நாளை நடைபெறவுள்ளது.

இதன்போது, ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்தோர் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் சுதந்திர மக்கள் சபை இணைந்து புதிய கூட்டணியை அமைத்தனர். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் ஐக்கிய மக்கள் கூட்டணி நிறுவப்பட்டது.

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த 05 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட நிலையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான

ஜி.எல். பீரிஸ், ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் கைச்சாத்திட்டனர். மேலும், சுதந்திர மக்கள் சபையின் உறுப்பினர்களான ஜி.எல்.பீரிஸ், டிலான் பெரேரா, நாலக கொடஹேவா, கே.பி. குமாரசிறி, உபுல் கலப்பட்டி மற்றும் வசந்த யாப்பா பண்டார ஆகியோர் ஐக்கிய மக்கள் கூட்டணியின் இணைந்துக்கொண்டனர்.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...