சட்டமூலங்கள் சிலவற்றை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்!

Date:

அண்மைக் காலத்தில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலங்கள் சிலவற்றை நேற்றையதினம் (01) சான்றுரைப் படுத்தியிருப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (02)சபையில் அறிவித்தார்.

பிணைப்பொறுப்பளிக்கப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள், ஆவணங்களைப் பதிவுசெய்தல் (திருத்தம்), நம்பிக்கைப் பொறுப்பு பற்றுச்சீட்டுக்கள் (திருத்தம்), ஈடு (திருத்தம்), நிதிக் குத்தகைக்கு விடுதல் (திருத்தம்), உள்நாட்டு நம்பிக்கைப் பொறுப்பு (திருத்தம்) மற்றும் கம்பனிகள் (திருத்தம்) ஆகிய சட்டமூலங்களையே சான்றுரைப் படுத்தியிருப்பதாக அவர் அறிவித்தார்.

இதற்கமைய, குறிப்பிட்ட சட்டமூலங்கள் 2024ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க பிணைப்பொறுப்பளிக்கப்பட்ட கொடுக்கல்வாங்கல்கள் சட்டம், 2024ஆம் ஆண்டின் 18ஆம் இலக்க ஆவணங்களைப் பதிவுசெய்தல் (திருத்த) சட்டம், 2024ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க நம்பிக்கைப் பொறுப்பு பற்றுச்சீட்டுக்கள் (திருத்த) சட்டம், 2024ஆம் ஆண்டின் 20ஆம் இலக்க ஈடு (திருத்த) சட்டம், 2024ஆம் ஆண்டின் 21ஆம் இலக்க நிதிக் குத்தகைக்கு விடுத்தல் (திருத்த) சட்டம், 2024ஆம் ஆண்டின் 22ஆம் இலக்க உள்நாட்டு நம்பிக்கைப் பொறுப்பு (திருத்த) சட்டம் மற்றும் 2024ஆம் ஆண்டின் 23ஆம் இலக்க கம்பனிகள் (திருத்த) சட்டம் எனும் பெயரில் நேற்று (01) முதல் நடைமுறைக்கு வருகின்றன.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...