சுற்றுலா பயணிக்கு வடை, தேநீரை 800 ரூபாவுக்கு விற்றவர் நீதிமன்றில்!

Date:

களுத்துறை உணவகம் ஒன்றில் வெளிநாட்டுப் சுற்றுலா பயணி ஒருவருக்கு ‘வடையும் ஒரு சாதாரண தேநீரும்’ 800 ரூபாவுக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர் இன்று (18) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

இதற்கமைய அவர், களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டு சுற்றூலாப் பயணி ஒருவருக்கு குறித்த சந்தேகநபர், உளுந்து வடை மற்றும் தேநீரை 1,000 ரூபாவுக்கு விற்பனை செய்ய முற்பட்டிருந்தார். இதனையடுத்து குறித்த சுற்றுலாப் பயணி அது தொடர்பில் கேள்வி எழுப்பியிருந்த நிலையில் அவரிடம் சந்தேகநபர் 800 ரூபாயை பெற்றுக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில் அதிகூடிய விலைக்கு வடையை விற்பனை செய்தவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் களுத்துறை பகுதியைச் சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதி எனவும் நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

மேலும் வடையை அதிகூடிய விலைக்கு விற்பனை செய்த உணவகத்தின் உரிமையாளருக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபை வழக்கு தொடர்ந்துள்ளது

பொருள் விலை காட்சிப்படுத்தப்படாமை, பற்றுச்சீட்டு வழங்கப்படாமை மற்றும் நுகர்வோரை ஏமாற்றியமை போன்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...